15th January 2013 12.35AM
நீ தானே என் பொன்வசந்தம் படம் ஓடவில்லை என்றாலும், சமந்தாவுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
இதனையடுத்து தமிழில் இரண்டு பெரிய நிறுவனங்களின் படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகைகளை பார்த்து பயப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அப்படி எல்லாம் எதுவுமில்லை.
என்னை பொறுத்தவரை தெரியாத மொழிகளில் நடிக்கும் போது, அவ்வளவு வசதியாக இருக்காது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் என்னால் நன்றாக பேச முடியும். ஆனால் இந்தி அப்படி இல்லையே.
அதனால் தான், அந்த பக்கம் போவதற்கு எனக்கு விருப்பமில்லை. மற்றபடி பாலிவுட் நடிகைகளைப் பார்த்து, எனக்கு எந்த பயமும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.
தன் உடல் நிலை குறித்து கூறுகையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதால், இரண்டு மாதம் ரெஸ்ட் எடுக்க வேண்டியிருந்தது.
இதனால் சில படங்களில் நடிக்க முடியாமல் போய் விட்டது. ஆனால் தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கதை கட்டி விட்டனர், இதற்காக நான் கவலைப்படவில்லை என்றார்.