13th January 2013 4.40AM
விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.சில் பார்க்க 1000 ரூபா பணம் கட்டியிருந்த சில வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல், பணத்தை திருப்பிக் கொடுத்து வருகிறது என்ற தகவல் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஸ்வரூபம் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட பின், டி.டி.எச்சில் பின்னர் ஒரு நாள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று கமல் தெரிவித்திருந்தார்.
விஸ்வபரூபம் படத்தை முதலில் டி.டி.எச்சில்தான் வெளியிடுவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். இதையடுத்து எழுந்த பல பிரச்சனைகளுக்குப் பிறகு, தனது படம் முதலில் தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்யப்படுகிறது என்று அறிவித்து விட்டார். விஸ்ரூபத்தை ஒளிபரப்பும் உரிமைக்காக ஒப்பந்தம் செய்துகொண்ட ஏர்டெல், டி.டி.எச் வாடிக்கையாளர்களிடம் பணத்தையும் வசூலித்துவிட்டது.
படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட பின், டி.டி.எச்சில் பின்னர் ஒரு நாள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவித்திருந்த கமல், விஸ்வரூபம் டி.டி.எச். ஒளிபரப்பு எந்த தேதியில் என்று குறிப்பிடவில்லை.
இந்நிலையில் ஏர்டெல் டி.டி.எச் விஸ்வரூபம் படத்திற்காக வாங்கிய பணத்தை சில வாடிக்கையாளர்களுக்கு திருப்பிக் கொடுத்து வருகிறது என்ற தகவல் இன்று வெளியாகியுள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பணம் திருப்பிக் கொடுக்கப்படுகிறதா, அல்லது, புகார் தெரிவித்த சிலருக்கு மட்டும் திருப்பிக் கொடுக்கப்படுகிறதா என்பது குழப்பமாக உள்ளது.
ஏர்டெல் செய்தி தொடர்பாளரை நாம் தொடர்புகொண்டு விசாரித்தபோது, இன்றும் (ஞாயிறு) நாளையும் தமது கார்ப்பரேட் அலுவலகம் விடுமுறை என்பதால் நாளை மறுதினம் தொடர்பு கொள்ள சொன்னார்கள்.