Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

மும்பை மக்களின் மனம் கவர்ந்த ராதே...வீணா மாலிக்!

மும்பை மக்களின் மனம் கவர்ந்த ராதே...வீணா மாலிக்!
12th August 2012 5.58AM

மும்பை: புதிய ராதையாக உருவெடுத்துள்ளார் பாகிஸ்தானின் வீணா மாலிக். மும்பையில் பாஜக சார்பில் நடந்த கிருஷ்ண

 ஜென்மாஷ்டமி விழாவில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து கெளரவப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.


மும்பை பாஜக தலைவர் ராஜ் புரோஹித்தான், வீணா மாலிக்கை ஸ்பெஷலாக அழைத்திருந்தார். அந்த விழாவில் கிட்டத்தட்ட வீணாவையே அனைவரும் ராதையாக பாவித்து சிறப்பாக கவனித்தனராம்.


இதுகுறித்து ராதை அதாவது வீணா கூறுகையில், இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். இப்படி ஒரு சிறப்பான விழாவுக்கு என்னை அழைப்பார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. மும்பை மக்கள் மிகுந்த பாசக்காரர்கள், நேசக்காரர்கள். எனக்கு மும்பை மிகவும் அதிர்ஷ்டமான நகரம். எனது இதயத்தோடு நெருங்கிப் போய் விட்டது என்றார்.


பரவாயில்லை, கை நிறையப் படம் இல்லாவிட்டாலும் வாய் நிறையப் புன்னகையுன் அடிக்கடி புகைப்படம் சகிதமாக செய்திகளில் அடிபட்டுக் கொண்டுதான் உள்ளார் வீணா.


சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: